<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-31886045</id><updated>2011-09-21T22:21:14.351+08:00</updated><title type='text'>தேடித்..தேடி..</title><subtitle type='html'>முடிவில்லா தேடல்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி தேடி.....சில சமயம் நானாகி, சில சமயம் வீணாகி, அந்த வளர் சிதை மாற்றங்களின் வார்த்தைகள் வடிவம் தான் இங்கே.........</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://spvaishali.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31886045/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://spvaishali.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Siththan</name><uri>http://www.blogger.com/profile/12304366660242719089</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>8</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-31886045.post-115769770361155261</id><published>2006-09-08T14:31:00.000+08:00</published><updated>2006-09-23T08:40:49.626+08:00</updated><title type='text'>முனி அடி  (தேன்கூடு போட்டி)</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/3101/3475/1600/children.0.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/3101/3475/320/children.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சூரியன் தன் பார்வையை பூமியிலிருந்து முற்றிலுமாய் விலக்கிக் கொள்ள, இருளின் மேலாண்மை எங்கும். இரவோடு எங்களால் இவ்வளவு தான் போட்டி போட முடியும் என்று, தூரத்தில் சின்னதாய் செயற்கை ஒளிப் புள்ளிகள். சாலையின் இரு புறங்களிலும் நடு உடம்பில் 48, 49 என அரசாங்க பச்சைக் குத்தப் பட்ட புளிய மரங்கள், வாழ்க்கை தத்துவத்தை பிரதிபலிக்கும் மேடு, பள்ளங்கள் நிறைந்த சாலை.......அமைதியும் இரவும் ஆலோசிக்கொண்டிருந்த நேரம்......லப்..டப்...லப்...டப் என ரப்பர் செருப்பு தரையோடு தாளம் போட...அவள் நடந்து கொண்டிருந்தாள்....தனியாக....ஒரு பத்து நிமிடங்களாக....அப்போது "ப்பீ...ப்பீ..." என்ற ஹார்ன் சத்தத்துடன்....இரவை கொஞ்சம் ஹெட்லைட் மூலம் நிர்வாணமாக்கிக் கொண்டே...போனது ஒரு மோட்டார் சைக்கிள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;"சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......." எனக் கத்திக் கொண்டே பின்னாலேயே ஓடினாள் இவள். சத்தம் கேட்டு மோட்டார் சைக்கிள் நின்றது.&lt;br /&gt;"என்னாம்மா"&lt;br /&gt;"சார்! அந்த சாவடி முக்குட்டுல கொஞ்சம் எறக்கி விட முடியுமா ?"&lt;br /&gt;"சரி ! சரி! ஏறிக்க ! கம்பிய கெட்டியா புடிச்சிக்க" மோட்டார் சைக்கிள் நகர்ந்தது&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அறுவது சொச்சம் குடிசைகள், கூரை வீடுகள், ஏழெட்டு மச்சு, ஒட்டு வீடுகள், கொஞ்சம் ஜனங்கள், ஆடு மாடு பன்றிகள்னு ஒரு சராசரி இந்திய கிராமம் தான் மந்தியூர். அங்கு ஒரு வீட்டில், சோளத் தட்டையை அடுப்பில் செருகி, ஊதாங்குழலால்....உஸ்...உஸ்ஸென்று ஊதி நெருப்பை உசுப்பேத்திக் கொண்டிருந்தாள் வள்ளி. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;வாசலிலிருந்தே "ஐசு !! ஐசு !!" எனக் கூப்பிட்டுக் கொண்டே வந்தான் செவப்பு.&lt;br /&gt;"ஏ புள்ள ! எங்க புள்ள ஐசு" வள்ளியை கேட்டான்&lt;br /&gt;"இன்னும் ஊட்டுக்கு வள்ள, அந்த மாலா பொட்டை கூட பேசிட்டு இருக்கும்...போயி கூட்டியா"&lt;br /&gt;கூட்டி வர போனான் செவப்பு. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;செவப்புக்கு அவன் அம்மா அப்பா வெச்ச பேரு "செந்தாமரை". "பொறந்தப்ப பார்க்க செவப்பா, அழகா...இருப்பான். அதான் செந்தாமரைன்னு பேரு வச்சோம்"னு அவன் அப்பன் சொல்வான். ஊர் வச்ச பட்ட பெயர் தான் "செவப்பு". அவனுக்கும் வள்ளிக்கும் பொறந்தது தான் அவன் "ஐசு ! ஐசு !" ன்னு செல்லமா கூப்பிடுற "ஐஸ்வர்யா". ஒரு நாலு வருசத்துக்கு முன்னால், ஒரு நாள் வள்ளிக்கு திடீரென வயிற்று வலி வர, அவளுக்கு புரியாத எதோ காரணத்திற்காக அரசாங்க ஆஸ்பத்திரியில் அவள் கர்ப்பப் பையை கழட்டி விட்டார்கள். ஒரு பிள்ளை தான் என ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;செவப்பு கொஞ்சம் அப்பிராணி -- வள்ளியே அப்படி சொல்வாள். வள்ளி கறுப்பா இருந்தாலும் களையா இருப்பா. கெட்டிக்காரி. வள்ளி தான், வயல் வேலை செஞ்சிட்டுருந்தவனை, "இந்தா! இங்க என்னாத்த சம்பாதிக்க முடியும். அந்த பொட்டைக்கு நாலு காசு சேத்து வக்க வேணாமா?. பக்கத்து டவுனுல போயி வேல செய்லாம்.நானும் வரேன்"னு சொல்லி, அவன் பஸ் ஸ்டாண்டுல மூட்டை தூக்குற வேலையும், இவள் சித்தாள் வேலையும் செய்ய ஆரம்பிச்சது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;அவள் தான் "இந்தா! நாம படுற கஷ்டம்லாம், நம்ம புள்ள பட கூடாது. அவள நல்லா படிக்க வெக்கனும். பெரிய ஆபிஸராக்கனும்" னு பக்கத்து டவுன் மாதா கோயில் பள்ளிக் கூடத்துக்கு ஐசுவை அனுப்பியவள். அவள் ஊரிலேயே ஐசும், மெத்தை வீட்டு மாலா வும் தான் அந்த பள்ளிக் கூடத்தில் படிக்கிறார்கள். அதில் அவளுக்கு பெருமை.&lt;br /&gt;&lt;br /&gt;செவப்பு, மாலா வீட்டு வாசலிலிருந்து "ஐசு!ஐசு" என கூப்பிட்டான். மாலா மட்டும் வெளியே வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"மாலா !! ஐசு உள்ள இருக்கா ??"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல மாமா, அவ இன்னிக்கு கொஞ்சம் லேட்டாதான் வருவா மாமா. டீச்சர் பரிச்சை பேப்பர் திருத்தனும்னு கொஞ்ச நேரம் இருக்க சொல்லிட்டாங்க. கடசி பஸ்ஸில வரேன்னு சொன்னா"&lt;br /&gt;"சரி. அது வந்தா நேரா ஊட்டுக்கு வர சொல்றியா "&lt;br /&gt;மாலா சரியென தலையாட்ட...செவப்பு வீட்டுக்கு வந்தான். வள்ளியிடம் சொல்லி விட்டு படுத்து விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தா!!! உன்ன தான்! கடசி பஸ் வந்திட்டு போயிடுச்சு...புள்ளய காணோம். எழுந்திருயா!. பஸ்ஸை வுட்டுடுச்சோ என்னவோ"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னா புள்ள! மணி பத்தாவ போவுது. முன்னாலேயே சொல்லக்கூடாது"&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த பஸ்காரன் என்னைக்கு நேரத்துல வந்துருக்கான். செத்த முன்னாடி தான் போனான்"&lt;br /&gt;"சரி! சரி! வா! அந்த அரிகேனயும், பேட்ரி லைட்டும் எடு...புள்ள தனியா நடந்து வருதோ என்னவோ தெரியல"&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் மீண்டும் மாலா வீட்டுக்கு போனார்கள். அங்கு அவள் வரவில்லை என சொல்லவே, டவுனுக்கு போற ஒத்தையடி பாதையிலே நடக்க ஆரம்பித்தார்கள். அந்த பாதை சாவடின்னு ஒரு ஊர்ல போய் சேரும், அது ஒரு 5கிமீ இருக்கும். அங்கிருந்து, 1 கிமீ டவுன். ஒண்ணரை மணிக்கு ஒரு தரம், ஒரு பஸ். எட்டு மணியோட கடைசி பஸ். அதை விட்டா நடந்து தான் போக வேண்டும். இன்னோரு பாதை 10 கிமீ எடுக்கும். பஸ்...வழி அது.&lt;br /&gt;செவப்பும் வள்ளியும் ஒத்தையடி பாதையில் நடக்க ஆரம்பித்தார்கள். வழியில் பக்கத்து தெரு களக்கட்டை (அவன் நிஜப் பெயர் : இளமாறன்) பார்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"லே, களக்கட்டு...ஐசுவை பாத்தியாடா" - செவப்பு கேட்டான்.&lt;br /&gt;"இல்ல செவப்பு. இன்னுமா வரல ? பொட்ட புள்ள தனியாவா வருது. சீக்கிரம் போங்க! முனி கினி அடிச்சிட போகுது"&lt;br /&gt;"நீ வேற களக்கட்டு.....அபச குணமா பேசிட்டு. வா நீ "- வள்ளி கோபத்தோடு சொல்லிவிட்டு நடந்தாள். அந்த பாதையில் ஒரு முனி கோயில் இருக்கிறது. நேரம் கெட்ட நேரத்தில் போனால் முனி அடிச்சிடும் என்ற பயம்....அங்கு எல்லோருக்கும் உண்டு ஒரு சில இளவட்டங்களைத் தவிர.&lt;br /&gt;&lt;br /&gt;முனி கோயிலயும் தாண்டி "சாவடி முக்குட்டு" க்கும் வந்து விட்டார்கள். ஆள் நடமாட்டமே இல்லை.&lt;br /&gt;"இந்தா! லைட்ட அடிச்சு பாரு எல்லா எடமும்". "அய்யா! முனியாண்டி, என் புள்ளைக்கி ஒன்னும் ஆவ கூடாது. நீதான் தொன" -- வள்ளி அழ ஆரம்பித்து விட்டாள். செவப்புக்கும் கண் கலங்க ஆரம்பித்து விட்டது.&lt;br /&gt;"வா புள்ள! பஸ்சு போற வழில பாக்கலாம். முனிக்கு பயந்து இந்த வழில போவுதான்னு தெரியல"&lt;br /&gt;"என் புள்ள எங்க போயி நிக்கிறாளோ.....தெரியிலயே."--வள்ளி ரொம்பவும் அழ ஆரம்பித்து விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இரண்டு மைல் நடந்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;லைட்டை அடித்துக் கொண்டே வந்த செவப்பு, ரோட்டு இறக்கத்தில்....ஒரு கருவை புதருக்கு பக்கத்தில் எதோ வெள்ளையாகத் தெரிய...&lt;br /&gt;&lt;br /&gt;"வள்ளி !!! அங்கன பாரு புள்ள, எதோ வெள்ளயா தெரியுது...வா! போயி பாக்கலாம்"&lt;br /&gt;லைட்டை அடித்துக் கொண்டே வந்தவன்...அதிர்ந்து போனான்.&lt;br /&gt;ஐசு வாயும் கையும் கட்டப் பட்டுக் கிடந்தாள். கண்களிலிருந்து தாரையாக கண்ணீர். மேலுடம்பில் சட்டை இல்லை. அதை கிழித்து தான்...வாயும் கையும் கட்டப் பட்டிருந்தது. ஊதா பாவாடை தாறுமாறாக....கிடந்தது...மறைக்க வேண்டியதை மறைக்காமல்.....உதிரம் உறையாமல்.....உடலின் பல பகுதிகளில் சிறு காயங்களுடன்...&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ!!! ஐய்யய்யோ !!!! நம்ம புள்ள தான்யா" -- வள்ளி அடி வயிற்றிலிருந்து அலறினாள். வள்ளிக்கென்னவோ உதிரம் உலர்ந்து தான் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டையை கிழித்து தான் வாய் கை கட்டப்பட்டிருந்தது.&lt;br /&gt;மீதமிருந்த அவள் மேலே கிடந்த துணி தான் லைட் அடையாளம் காட்டியது.&lt;br /&gt;வாயிலிருந்த துணியை அவிழ்த்த உடனே......"அம்மா! அம்மா!........." என வள்ளியை கட்டிக் கொண்டு அடி வயிற்றிலிருந்து அழ ஆரம்பித்து விட்டாள் ஐசு.&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா! ..ஒரு...ஒரு.. மோட்ருசைக்கிள்ள வந்த ஆள, என்ன சாவடி முக்குட்டுல வுட சொன்னேன். அந்த ஆளு இங்கன கொண்ட்டு வந்து..."- வள்ளி தேம்பி தேம்பி சொன்ன ஐசுவின் வாயை கையால் மூடிக்கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"வேணா, ஆயா, சொல்லாத. என் வவுறு எறியது"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னா புள்ள..... நாம பண்ண போறோம்......" -- குரல் உடைந்து ரெண்டு கையவும் தலையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான் செவப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒத்த கிளி பெத்து....என்&lt;br /&gt;உசுரயே.. நான் கொடுத்து....&lt;br /&gt;ஆபிசரு ஆவனுன்னு...&lt;br /&gt;அசலூரு நா அனுப்ப...என்&lt;br /&gt;பச்சை கிளிய....&lt;br /&gt;பாழாக்கி போனானே...எந்த&lt;br /&gt;படுபாவி பெத்த மயன்"......ஏ செவப்பு.......என் ரெத்தம் கொதிக்குதுய்யா!!!&lt;br /&gt;வள்ளி ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்து விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;செவப்பு.....துண்டை வாயில் வைத்து....உடல் குலுங்க அழுது கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வள்ளி தான் கொஞ்சம் சுதாரித்து, "தூக்குயா புள்ளய !!!. யாராவது கேட்டா முனி அடிச்சிடுச்சி...ன்னு சொல்லு. ஆயா ஐசு, ஆரு கேட்டாலும் எதுவும் சொல்லாத"&lt;br /&gt;&lt;br /&gt;செவப்பு கைலியை அவிழ்த்து, ஐசு உடம்பை சுத்தி...தூக்கி தோளில் போட்டுக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றும் அறியாத அந்த &lt;strong&gt;ஒன்பது வயது....பிஞ்சு.....&lt;/strong&gt;தனக்கு இழைக்கப் பட்ட அநீதியைக் கூட...என்னவென்று தெரியாமல்....தந்தையின் அரவணைப்பிலோ.....அல்லது....பெற்றோரைக் கண்டதாலோ...அல்லது....இயற்கையின் உந்துதலாலோ......அப்படியே உறங்கிப் போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"முனி அடிச்சும் பொழச்சிக்கிச்சுல்ல!!! முனி ரோசக்காரந்தான். ஆனா, தன் புள்ளய எப்படி கொல்லுவான் !!! சும்மா பயமுறுத்தி விட்டுறுப்பான். அவனுக்கு கெடா வெட்டி ரெண்டு வருஷமாச்சே. அதான் வேலெய காட்டிப்புட்டான். கொஞ்ச நாள் அந்த பொட்டைய அலற அடிச்சிதான் நிப்பாட்டுவான்... " -- முனி கோயில் பூசாரி செவப்புவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;முனிக்கு இப்பொழுது நிறைய படையல் நடக்கிறது. இனிமேலெயும் யாரையும் அடிச்சிடக் கூடாதுன்னு. முனி என்னவோ முன்னெப்போதும் போல அப்படியே தான் நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;[பி.கு : நமது பாரதத்தில் &lt;strong&gt;ஒவ்வொரு 13 மணி நேரத்திற்கும், ஒரு பத்து வயதிற்கு கீழ் உள்ள குழந்தை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறார்கள்&lt;/strong&gt;--ஆதாரம் : FrontLine] &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31886045-115769770361155261?l=spvaishali.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spvaishali.blogspot.com/feeds/115769770361155261/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31886045&amp;postID=115769770361155261' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31886045/posts/default/115769770361155261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31886045/posts/default/115769770361155261'/><link rel='alternate' type='text/html' href='http://spvaishali.blogspot.com/2006/09/blog-post.html' title='முனி அடி  (தேன்கூடு போட்டி)'/><author><name>Siththan</name><uri>http://www.blogger.com/profile/12304366660242719089</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31886045.post-115566996837232135</id><published>2006-08-16T03:21:00.000+08:00</published><updated>2006-08-16T07:00:51.863+08:00</updated><title type='text'>மருந்து - தேன்கூடு போட்டி</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/3101/3475/1600/bxp35782.jpg"&gt;&lt;span &gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 133px; CURSOR: hand; HEIGHT: 147px" height="169" alt="" src="http://photos1.blogger.com/blogger/3101/3475/320/bxp35782.jpg" width="166" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span &gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span &gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span &gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span &gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span &gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span &gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span &gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span &gt;"நீ வித்த பொருளோடபேரு என்ன தெரியுமா ? " -- பப்ளிக் ப்ராசிக்யூட்டர் மொழி பெயர்ப்பாளர் உதவியுடன் கேட்டார்.&lt;br /&gt;"பேரு என்னன்னு தெரியாது சார். மருந்துன்னு கேப்பாங்க. கொடுப்பேன் சார். "&lt;br /&gt;"எத்தனை நாளா இதை செஞ்சிட்டு வந்த"&lt;br /&gt;"ரெண்டு மாசமா சார்"&lt;br /&gt;"சங்கரா !! " என்ற குரல் கேட்டு சிந்தனை, சில்லெறிந்த தண்ணீர் பரப்பாய் சிதறியது. விழி உயர்த்தி பார்த்தான் சங்கரன். கண்களில் கண்ணீர்.&lt;br /&gt;"இன்னும் ஏன் லா* அழுதுட்டு இருக்கே.....சொன்னபடி செய் எல்லாம் சரியா போய்டும்..." என்றது மகா என்னும் மகேந்திரன்.&lt;br /&gt;"டிரை பண்றேன் முடியலண்ணே".&lt;br /&gt;"சரி. விடாமல் முயற்சி பண்ணு" ன்னு சொல்லிட்டு மகா நகர, நினைவு மேகங்களுக்குள் மீண்டும் சங்கரன்.&lt;br /&gt;மீண்டும் பப்ளிக் ப்ராசிக்யூட்டர் மொழி பெயர்ப்பாளர் உதவியுடன்&lt;br /&gt;"யார் கொடுத்து விக்க சொன்னாங்க !! தெரியுமா?"&lt;br /&gt;"ஆள தெரியும் சார். ஆனா, பேரு தெரியாது சார்"&lt;br /&gt;"ஓவ்வொரு பேக்கட்டும் எத்தனை கிராம் தெரியுமா ?"&lt;br /&gt;"தெரியும் சார். 1 கிராம் சார்"&lt;br /&gt;"அன்னைக்கு எத்தனை பேக்கட்டு வைச்சிருந்தே"&lt;br /&gt;"9 சார்"&lt;br /&gt;"நீ வித்த பொருளோட பேரு "ஹெராயின்". சிங்கப்பூர் சட்டப்படி 15 கிராமுக்கு மேலே வச்சிருந்தா மரண தண்டனை னு தெரியுமா உனக்கு"&lt;br /&gt;"சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... எனக்கு தெரியாது சார். எனக்கு யாரும் சொல்லவும் இல்லை சார்.." சங்கரன் ஓவென்று அழ ஆரம்பித்து விட்டான். மரண தண்டனை என்றால் யாருக்குத்தான் அழுகை வராது.&lt;br /&gt;"உன் பேரு என்ன ?" ...மீண்டும் கேள்வி.&lt;br /&gt;சங்கரன் "எனக்கு தெரியாது சார், எனக்கு தெரியாது சார்..." என கேவி கேவி அழ ஆரம்பித்து விட்டான். நிறுத்தாமல் போகவே, நீதிபதி பிறிதொறு நேரத்திற்கு விசாரணையை தள்ளி வைத்தார்.&lt;br /&gt;இந்திய மண்ணில் பிறந்து, இப்போது வேறொரு நாட்டில் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் இவனுக்கு வயது 23. ஒரு வருடத்திற்கு முன் கேபிள் பதிக்கும் (பூமிக்கடியில்) வேலைக்கு பலரைப் போலவே வண்ணக் கனவுகளுடன் சிங்கப்பூர் வந்திறங்கியவன்.&lt;br /&gt;சங்கரனோட அப்பா, "வண்டில வடை விக்கிறவன் வடை சுட்டா, வழில போறவனுக்கெல்லாம்....வாசனை வர மாதிரி" ஆதி சங்கரரை பத்தி தெருவில போறப்ப ஒரு சொற்பொழிவு கேட்டு பிள்ளைக்கும் சங்கரன் னு பேரு வைச்சவன், 2 ஏக்கர் நிலமும், 2 தங்கைகளையும், கொஞ்சம் கடனையும், கொஞ்சம் நல்ல பேரையும் வைத்து விட்டு, ஒரு ஆக்சிடெண்டில், அவசரமாக இவன் அம்மாவின் நெற்றியை மூளியாக்கி விட்டுப் போனான், அவர்கள் வாழ்க்கையும் கொஞ்சம் சேர்த்துத்தான். இந்திய மண்ணில் இவர்கள் கதை என்ன புதுசா ?.&lt;br /&gt;"இப்படி நம்மள அம்போன்னு வுட்டுட்டு பொய்ட்டாரே. நல்லா படிச்சவளுகளுக்கே, லட்சம் கொடு, பைக்கு கொடுன்னு, கேக்கறப்ப, வெறும் +2 படிச்ச இவளுவோள எப்படிடா கர சேக்க போரேன்" என்ற அம்மாவின் புலம்பலும், வெறும் 3000 ரூபாய் சம்பளம் தந்த வெல்டர் வேலையும், தங்கைகளின் எதிர் காலத்தைப் பற்றி வயிற்றை அடிக்கடி "எனிமா" இல்லாமல் கலக்க, நிலத்தை விற்று விட்டு , உறவுகளை விட்டு விட்டு, சிங்கப்பூர் வந்தவன்.&lt;br /&gt;வந்த இடத்தில் மூன்று மாதம் வேலை ஒழுங்காக தான் இருந்தது. அவன் அம்மா அடிக்கடி சொல்லுவா "கொடும கொடுமன்னு கோயிலுக்கு போனா, அங்க ஒரு கொடும ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சான்னு". அதை மாதிரி, அவன் வேலை செய்த நிறுவனம், அது செய்த ஒரு தில்லுமுல்லுக்காக, நீதி மன்றம் போக, இவனுக்கு தந்த வேலை அனுமதி அட்டை, 3 மாதத்திற்கு சிறப்பு அனுமதி அட்டையாக மாற்றப்பட்டது. அதை வைத்து வேலை செய்ய முடியாது. ஒரு நாளில் வாழ்க்கை, கார் சக்கரத்தில் மாட்டிய களிமண் பொம்மையாக போய் விட்டது.&lt;br /&gt;கையில் இருந்த கொஞ்ச காசும் செலவாகி விட்டது. கண்களை மூடினால் அம்மாவும் தங்கைகளும் தான். "திரும்ப போனால் என்ன செய்வது ? வெல்டர் வேலையும் கிடைக்குமா ? நிலமும் வித்தாச்சு" என பல பயமுறுத்தும் சிந்தனைகள். அவனோடு வேலை செய்த பலரின் நிலை இது தான். இந்த கவலையோடு வீராசாமி ரோட்டில் உள்ள ஒரு மரத்தடியில் கீழ் படுத்திருந்த போது தான் ஒரு நாள், ஒரு கை தொட்டு எழுப்பியது.&lt;br /&gt;"ஊர்காரன் (இந்தியாவிலிருந்து வந்தவர்கள்) மாதிரி இருக்கே !! வேலை இல்லயா ?" எழுப்பிய ஆள் கேட்டான்.&lt;br /&gt;"ஆமாங்க !!"&lt;br /&gt;"சரி !! நான் ஒரு வேலை தரேன், செய்யறியா ? ஒர்க் பெர்மிட் வேண்டாம். வேலை ரொம்ப சினாங்கு (சுலபம்). நீ எங்கவும் போ வேணாம். செகண்ட் ஹேண்ட் மார்க்கட் பக்கத்தில நான் காட்டுற இடத்துல நின்னா போதும். ஆள் வந்து, "மருந்து"ன்னு கேப்பாங்க. காசை வாங்கிட்டு கொடுத்தா போதும்"&lt;br /&gt;"மருந்தா ? "&lt;br /&gt;"ஆமாம். போதை மருந்து. நீ தொடக்கூடாது அத. ஒரு பாக்கட்டுக்கு 10% உனக்கு. நீ என்ன செய்றேன்னு யாருக்கும் தெரியக் கூடாது. குறிப்பா உன் கூட்டாளிங்களுக்கு. நாளக்கி வரேன். ஓகே வா இல்லயான்னு சொல்லு" அரை மணி நேர விரிவுரை கொடுத்து விட்டு போனான் அவன்.&lt;br /&gt;சங்கரன் படுத்துக் கொண்டே யோசித்தான். அம்மா அடிக்கடி சொல்வது ஞாபகத்திற்கு வந்தது "அய்யா, நாம எவ்ளோ கஸ்டப்பட்டாலும், நேர்மை தவறக்கூடாதுய்யா". "அம்மா, நேர்மை, தங்கைகள், வேலையின்மை, ஆசை" எல்லாமாய் சேர்ந்து குழப்ப, அப்படியே உறங்கிப் போனான். விழித்த போது, போதி மரத்து புத்தனாய், அவன் விட்ட ஆசையை இவன் பிடித்துக் கொண்டான்.&lt;br /&gt;அடுத்த இரண்டு மாதத்தில் நிறைய வருமானத்தை சம்பாதித்தான். ஒரு நாள் மத்திய போதை தடுப்பு மைய அதிகாரி மூர்த்தி மஃடியில் வந்து "மருந்து" கேட்க, இவன் கொடுக்க, கையும் களவுமாக பிடி பட்டான். தடு மாறும் முடிவுகள் தரும் மாற்றங்கள், வாழ்க்கையை தலைகீழாகத்தான் மாற்றி விடுகின்றன.&lt;br /&gt;மீண்டும் நீதிமன்றம்.....&lt;br /&gt;"சார், நான் ரொம்ப ஏழை சார் ! அம்மா, தங்கைகள் இருக்காங்க சார். சாப்பாட்டுக்கே வழி இல்ல சார் !! என் ஒரு ஆள் வருமானத்தை வச்சு தான் சார் அவங்க சாப்பிடனும். ரெண்டு தங்கச்சிக்கும் கல்யாணம் பண்ணி வக்கனும். வேலை இல்லாத கஷ்டத்தில் தான் சார், இதை செஞ்சேன்"...என்று அடிவயிற்றில் இருந்து அழுதான்.&lt;br /&gt;நீதிபதி தன் தீர்ப்பில் "உன் ஒரு குடும்ப நிம்மதிக்காக, பல குடும்பங்கள் (போதை புழங்கிகளின்) கஸ்டப்படுவதில் நியாயமில்லை. இருந்தாலும், உன் வயதை கருத்தில் கொண்டு, 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கிறேன்".&lt;br /&gt;"9 வருசமா !!!!! சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....நான் தப்பு பண்ணிட்டேன் சார்..........அய்யோ....அம்மா நா என்ன பண்ண போறேன். தப்பு பண்ணிட்டேனே !!!! அய்யோ....அம்மா நா என்ன பண்ண போறேன்....உங்கள நடுத்தெருவுல வுட்டுட்டேனே.." தலையில் அடித்துக் கொண்டு தரையில் விழுந்து புரண்டான்.&lt;br /&gt;சிறைக்கு வந்த பின், அவனைப் பார்த்து சிரித்த ஒரே ஒருவர் "மகா". 56 வயசுக்காரர். 15 வருடமாக கைதியாக இருப்பவர். நல்ல பதவியில் இருந்தவர். ஒரு நாள் படுக்கையில் மனைவியை மற்றொருவனுடன் கண்டு, வந்த கோபத்தில் சுத்தியை எடுத்து ஒரு வீசு வீச, அவள் கை முறிந்து, அவள் போலிஸில் புகார் செய்து....1 வருடம் சிறை. ஒரு வருடம் கழித்து வெளியில் வந்த மறு நாளே, தேடிப் பிடித்து அவள் கால்களை ஒரு கம்பியால் அடித்து இரு கால்களும் முறிந்து போக, இம்முறை, 3 ஆண்டுகள். அண்ணன், அக்கா எல்லோரும் "இவனுக்கு பைத்தியம் பிடிச்சு போச்சு. அரிப்பெடுத்து அவ போனா பொய்ட்டு போறான்னு தூக்கியெறிஞ்சிட்டு போறத விட்டுட்டு" இப்படி ஜெயிலுக்கு போவது பிடிக்காமல், கேட்பவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல், மகாவை பார்ப்பதையும் நிறுத்திக் கொண்டனர். நல்லவர்களுக்கே அங்கீகாரம் கொடுக்காத சமூகம், கைதிகளுக்கு கொடுத்து விடவா போகிறது ?. வெளியில் வந்த மகா, திருட்டுகளில் ஈடுபட்டு அடிக்கடி சிறை செல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறையில் சங்கரன் அழுது கொண்டே இருப்பதைப் பார்த்த மகா, ஒரு நாள் "சங்கரா !!! நீ எதுக்கு அழுவுரேன்னு எனக்கு தெரியும். மூணு மாசம் முன்னால, வெளில இருந்தப்ப ஒரு சாமியாரப் பாத்தேன். அவுரு சொன்னாரு "இந்த உலகத்தில் எதுவும், யாரும் யாருக்கும் சொந்தமில்லை. ஆனா எல்லாரும் எல்லாருக்கும் சொந்தம். பொண்டாட்டி கால ஏன் முறிச்சே !!! "அவ மேல அவ்ளோ அன்பு வச்சேன். அதான்" னு சொல்றே. அது காதலா? பாசமா ?. இல்லை, உன் கிட்ட இருந்தது எதிர்பார்ப்பு. அது மனசோட இயல்பு. காலம் காலமாக சேர்த்து வைத்த பதிவுகள். அதனால, மனச புரிஞ்சுக்க. அதுக்கு சுவாசத்தை புடிச்சுக்க. சுவாசத்தை கவனிக்க, கவனிக்க மனசு அடங்கும். மனசு அடங்க, ஒரு கட்டுப்பாடற்ற அன்பு மலரும்...அப்ப இந்த உலகமே உன் உறவுகள் ஆகும்...கோவம் ஒழிஞ்சு போகும்....போ".&lt;br /&gt;"நானும் யோசிச்சி பாத்தேன் சங்கரா !!! இந்த ஜெயில், வார்டன், நீ,நான்....எல்லாம் ஒருத்தருக்கொருத்தர் சொந்தம் தான். இந்த பூமி, வானம், காத்து எல்லாமும் தான். அம்மா தங்கச்சின்னு அழுவாம, எல்லாத்தையும் சொந்தமா பார்...அழுவரதுனால ஒன்னும் ஆவப் போறது இல்ல. மூச்சை கவனி, எண்ணம் நிக்கும். எண்ணம் நிக்க எல்லாம் நிக்கும், உன் அழுகையும் தான்"&lt;br /&gt;&lt;br /&gt;"சரிண்ணே !!! ரொம்ப தேங்க்ஸ்ணே" -- மூக்கை உறிஞ்சிக் கொண்டே சங்கரன். நன்றி சொல்லும் போதே "அம்மா, தங்கைகள்......பிச்சை எடுப்பது போல, தூக்கு போட்டுக் கொள்வது போல.......பலப்பல எண்ணங்கள்". மூச்சை இழுக்கும் போதும் அவர்கள் நினைவு...விடும் போதும் அவர்கள் நினைவு.&lt;br /&gt;இப்போதெல்லாம், "அய்யோ....அம்மா நா என்னம்மா பண்ண போறேன்.....அம்மாஆஆஆஆஆ....அம்மாஆஆஆஆ" என்ற அடி வயிற்று கதறல் அடிக்கடி கேட்கிறதாம்.....&lt;br /&gt;* * * * * * *&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லா* = சிங்கை, மலேசிய நாடுகளில் பரவலாக உபயோகத்தில் உள்ள சொல். அர்த்தம் ஏதும் இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு : உலகமெங்கும் சிறையில் தங்கள் உறவிற்காக வாடும்.....ஒவ்வொரு ஆத்மாவிற்கும்.....&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31886045-115566996837232135?l=spvaishali.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spvaishali.blogspot.com/feeds/115566996837232135/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31886045&amp;postID=115566996837232135' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31886045/posts/default/115566996837232135'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31886045/posts/default/115566996837232135'/><link rel='alternate' type='text/html' href='http://spvaishali.blogspot.com/2006/08/blog-post_16.html' title='மருந்து - தேன்கூடு போட்டி'/><author><name>Siththan</name><uri>http://www.blogger.com/profile/12304366660242719089</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31886045.post-115501057050595709</id><published>2006-08-08T11:18:00.000+08:00</published><updated>2006-08-08T16:41:44.506+08:00</updated><title type='text'>தடைபடா வர்த்தக பாதுகாப்பு திட்டமிடுதல் (Business Continuity Planning)</title><content type='html'>இன்று உலகம் முழுதும் பரவலாக தீவிரவாதம் பரவி இருக்கின்ற வேளையில், அதனால் ஏற்படும் விளைவுகள் எல்லோரையும் பாதிப்பது கண்ட உண்மை. (உம்). இரட்டை கோபுரங்கள் தகர்ப்பு. அதன் எதிரொலியாக உலகளாவிய பொருளாதார பாதிப்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு நிறுவனங்கள் இதனால் திவாலாகியும் இருக்கின்றன. அதனால், நானறிந்த வரையில் தடைபடா வர்த்தக பாதுகாப்பு திட்டமிடுதல் (Business Continuity Planning) -- இது என் மொழி பெயர்ப்பு (சரியான மொழிபெயர்ப்பு தெரிந்தால் சொல்லுங்கள்). இந்த திட்டமிடுதல், ஒரு நிறுவனம் எந்த சூழ்நிலையிலும் தன் வர்த்தகத்தை தொடர்ந்து நடத்த திட்டமிடுதலாகும். அது குண்டு வெடிப்பாக இருந்தாலும் சரி, பூகம்பமாக இருந்தாலும் சரி, வெள்ளமாக இருந்தாலும் சரி எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது, இந்த திட்டமிடுதலின் பல்வேறு அங்கங்களை தெரிவித்து விட்டு, பின்பு ஒவ்வொன்றாக விவரிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. தொடர் வர்த்தக திட்டம் பற்றிய திட்டம்&lt;br /&gt;2. இடர்ப்பாடு ஆய்வு ((Risk Assessment)&lt;br /&gt;3. வர்த்தக தாக்க ஆய்வு (Business Impact Analysis)&lt;br /&gt;4. வர்த்தக தொடர்ச்சி உத்திகள் உருவாக்கம் மற்றும் செயலாக்கம் (Developing and implementing business continuity strategies )&lt;br /&gt;5. நெருக்கடி கால பரிமாற்ற திட்டம் மற்றும் செயலாக்கம் (Planning and conducting crisis communications )&lt;br /&gt;6. புற, அரசாங்க மற்றும் நிருவனங்களின் ஒத்துழைப்பு திட்டம் மற்றும் செயலாக்கம் ( Planning and implementing coordination with external agencies )&lt;br /&gt;7. அவசர கால நடவடிக்கைகளும், நெருக்கடி கால நிர்வாக செயல்முறைகளும் (Developing emergency response and crisis management procedures )&lt;br /&gt;8. தொடர் வர்த்தக திட்ட தயாரிப்பு மற்றும் செயலாக்கம் (Developing and Implementing Business Continuity Plans)&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் எழுதுகிறேன்.......&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31886045-115501057050595709?l=spvaishali.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spvaishali.blogspot.com/feeds/115501057050595709/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31886045&amp;postID=115501057050595709' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31886045/posts/default/115501057050595709'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31886045/posts/default/115501057050595709'/><link rel='alternate' type='text/html' href='http://spvaishali.blogspot.com/2006/08/business-continuity-planning.html' title='தடைபடா வர்த்தக பாதுகாப்பு திட்டமிடுதல் (Business Continuity Planning)'/><author><name>Siththan</name><uri>http://www.blogger.com/profile/12304366660242719089</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31886045.post-115494099233867433</id><published>2006-08-07T16:03:00.000+08:00</published><updated>2006-08-16T04:58:59.393+08:00</updated><title type='text'>நான் - கடவுள்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/3101/3475/1600/PMahan.0.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/3101/3475/320/PMahan.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இவர் தான் &lt;strong&gt;"ஞான வள்ளல் பரஞ்ஜோதி மகான்"&lt;/strong&gt;. எத்தனை பேருக்கு தெரியும் எனத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் பதிவின் தலைப்பு இவர் அருளிய புத்தகத்தின் தலைப்பு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;"&lt;strong&gt;கடவுளை தவிர வேறொரு பொருள் இல்லாததால், வேறொரு பொருள் ஒன்று இருந்து அதை எடுத்து, கடவுள் எல்லாவற்றையும் படைத்தான் என்பதில்லை. எல்லாமாக (பரிணமித்திருப்பதே) விரிந்திருப்பதே கடவுள்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;-- "&lt;strong&gt;ஞான வள்ளல் பரஞ்ஜோதி மகான்" &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மகானின் வாழ்க்கை வரலாறு (சுருக்கமாக) :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மகான் ஒரு வசதியான இஸ்லாமிய குடும்பத்தில் மே 2, 1900 ம் ஆண்டு இராமனாதபுரம் மாவட்டத்தில், வில்லிபுத்தூர் தாலுக்காவில் உள்ள குஞ்ஜாபுரம் என்ற கிராமத்தில் பிறந்தார். பிள்ளை பருவத்தில் பள்ளிக்கு அவர் செல்லவில்லை. எனினும் அவர் புத்தி கூர்மையுடனும் கற்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறு வயது முதலே அவர் வாழ்க்கையின் உண்மையை அறிவதில் மிக்க ஆர்வமாக இருந்தார்.அதற்காக அவர் பல்வேறு வழிபாடுகளையும் சமய சடங்குகளையும் தீவிரமாக மிகுந்த வேட்கையோடு செய்து வந்தார். அப்போது அவருக்கு அவர் ஊரை விட்டு வெகு தொலைவில் ஒரு குருவினால் உபதேசம் செய்து வைக்கப்படுவதைப் போல கனவு கன்டார் (19 ஆகஸ்டு 1930 ). அந்த கனவு எட்டே கால் வருடங்கள் கழித்து அவர் ஊரை விட்டு 1400 மைல்களுக்கு அப்பால் நிகழ்ந்தேறியது ஒரு இம்மியும் பிசகாமல் கனவில் வந்ததை போலவே.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு 16 வயது இருக்கும் போது அவர் இரங்கூன் பயனமானார். அவர் மாமாவுடன் சிறிது காலம் வேலை செய்து விட்டு, 1933ல் சொந்தமாக தொழில் துவங்கினார். அப்போதும் கூட அவர் மனித வாழ்வின் ரகசியங்களை அறிந்து கொள்ள பல யோகிகளையும், புத்த சந்நியாசிக்களையும் சந்தித்து கொண்டுதான் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1938 ஜனவரி 7ம் நாள் மகான் அவரின் குரு கரிபுல்லா கமில் சைஈது இப்ராகிமை சந்தித்தார். ஆவர் மூலம் தாந்ரீக யோகத்தில் உபதேசம் பெற்றார். அது முதல் அவரிடம் ஒரு பெரிய மாறுதல் தெரிய ஆரம்பித்து விட்டது. அவர் மேலும் அதிக நேரம் தியானத்திலும், உள் முக ஆராய்ச்சியிலும் ஈடுபட ஆரம்பித்தார். மிக குறுகிய காலத்திலேயே "ஞானம்" கிடைக்கப் பெற்றார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவரின் குருவுக்கே இவரிடம் நடக்கும் மாற்றங்கள் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் திடீர் மாற்றத்தை பார்த்த ஒரு பெரியவர் இவரை பார்த்து "என்ன! குரு மாதிரி பிரகாசமாக இருக்கிறீர்கள்" எனவும், மகா "ஆமாம். இன்றிலிருந்து நான் ஒரு பெரிய குரு தான்" என்று அன்று முதல் வியாபாரத்தை விட்டு விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின், 1939ம் ஆண்டு இந்தியா வந்து மதுரையில் தன் சேவையை துவங்கினார். ஏழை எளிய மக்கள் என்று பாராமல் அனைவருக்கும் ஞானத்தை வாரி வழங்கியதால் ஞான வள்ளல் என பெயர் பெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"நடந்ததெல்லாம் பெரும் நன்மைக்கே. சந்தோசம்" -- ஞான வள்ளல் பரஞ்ஜோதி மகான்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p&gt;------ மகானின் வரலாறு தொடரும் -------&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;பி.கு : இவரிடம் தான் "வேதாத்ரி மகரிஷி" உபதேசம் பெற்றார் எனவும் வேதாத்ரி மகரிசியின் குண்டலினி தீட்சை முறைகளும் இவரின் குண்டலினி முறையை ஒட்டியது தான் என அறிகிறேன்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31886045-115494099233867433?l=spvaishali.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spvaishali.blogspot.com/feeds/115494099233867433/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31886045&amp;postID=115494099233867433' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31886045/posts/default/115494099233867433'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31886045/posts/default/115494099233867433'/><link rel='alternate' type='text/html' href='http://spvaishali.blogspot.com/2006/08/blog-post_07.html' title='நான் - கடவுள்'/><author><name>Siththan</name><uri>http://www.blogger.com/profile/12304366660242719089</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31886045.post-115469937536090059</id><published>2006-08-04T21:25:00.000+08:00</published><updated>2006-08-07T23:56:37.913+08:00</updated><title type='text'>தமிழில் பேச்சாளர் மன்றம்</title><content type='html'>என் நண்பர் ஒருவர் சொல்லுவார் "தமிழன் கைல மைக்க குடுத்தா கீழ வைக்க மாட்டான்". இது ஒரு நகைச்சுவைக்காக சொன்னாலும் கூட நம்மில் பலருக்கு குறித்த நேரத்தில் சொல்ல வேண்டிய விசயத்தை சொல்ல முடியாமல் போவது நிகழத்தான் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கெனவே அமெரிக்காவை மையமாகக் கொண்ட &lt;a href="http://www.toastmasters.org"&gt;Toastmasters International&lt;/a&gt;&lt;br /&gt;என்ற பொது நல அமைப்பு, Toastmasters Club (பேச்சாளர் மன்றம்) களை உலகெங்கும் அமைக்க உதவுகிறது. இந்த மையங்கள் ஒருவரின் பேச்சாற்றலையும், உரையாடல் திறத்தையும் மற்றும் தலைமைத்துவ பண்புகளையும் வளர்க்க உதவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு கூட்டத்திலும் தயாரிக்கப் பட்ட (Prepared), தயாரிக்கப் படாத (impromptu), பேச்சு மதிப்பீடு (Speech Evaluation) மற்றும் மொழி மதிப்பீடு (Language Evaluation) என பல்வேறு அங்கங்கள் உண்டு. இது மட்டுமன்றி ஒவ்வொறு பேச்சாளரும் பல்வேறு திட்டங்களை (Projects) சமர்ப்பிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு திட்டமும் ஒரு பேச்சாளருக்கு தேவையான தகுதிகளை வளர்க்க உதவும் வகையில் இருக்கும். உம். குரல், அங்க அசைவுகள், பேச்சமைப்பு.&lt;br /&gt;திட்ட சமர்ப்பித்தலில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவையும் சமர்பித்து முடிக்கும் போது ஒரு அடை மொழி அளிக்கப் படும்.&lt;br /&gt;&lt;br /&gt;CTM-Competent Toast Master&lt;br /&gt;ATM - Advanced Toast Master&lt;br /&gt;CL - Competent Leader&lt;br /&gt;&lt;br /&gt;போன்றவை சில அடைமொழிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;கேட்க ஆச்சரியமாக இருக்கலாம். உலகின் முதல் பொது தமிழ் பேச்சாளர் மன்றம் சிங்கப்பூரில் தான் துவங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நாட்டில் ஒரு மன்றம் ஏன் இன்னும் அமைக்கப்படவில்லை என தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில் உலக அளவில் இரண்டாவதாக வந்த தமிழர் (23 வயதில்) ஒருவர் சிங்கையில் இருக்கிறார். பெயர் : இரமேஷ் முத்துசாமி &lt;a href="http://www.geocities.com/nessea_pr/"&gt;http://www.geocities.com/nessea_pr/&lt;/a&gt;). தற்போது முதல் நிலைக்கு வர முயன்று வருகிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தெரிந்த வரை உலகத்திலேயே டோஸ்ட்மாஸ்டர்ஸ் அமைப்பின் கீழ் தமிழுக்கென்று கீழே உள்ள பேச்சாளர் மன்றங்கள் மட்டும் தான் உள்ளன :&lt;br /&gt;&lt;br /&gt;Penang Muslim League Tamil Club&lt;br /&gt;Meeting Time: 8:00 pm, 1st &amp; 3rd Tuesday&lt;br /&gt;Penang Muslim League35 Queen St, Georgetown, PEN, 10200,&lt;br /&gt;MalaysiaClub&lt;br /&gt;Contact club : 604 0124516898&lt;br /&gt;&lt;a href="mailto:zainulalam@commerce-assurance.com.my"&gt;zainulalam@commerce-assurance.com.my&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Penang Tamil Club - Club&lt;br /&gt;Meeting Time: 6:30 pm, 1st &amp;amp; 3rd Thursday&lt;br /&gt;60 Hargreaves CircusGeorgetown, Penang, 11600, Malaysia&lt;br /&gt;Contact club: &lt;a href="mailto:thanni6@yahoo.com"&gt;thanni6@yahoo.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Singapore Tamil Club - Club&lt;br /&gt;Meeting Time: 0230PM, 3RD Saturday&lt;br /&gt;Radin Mas CommunityNo 1 Telok Blangah Crs,&lt;br /&gt;Singapore &lt;a href="http://www.tamiltoastmasters.org/"&gt;http://www.tamiltoastmasters.org/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;TLCS Club - Club&lt;br /&gt;Meeting Time: 7:30 pm, Last Thursday of the Month&lt;br /&gt;Umar Pulavar Tamil Language Centre&lt;br /&gt;588C,Serangoon Road, Singapore, 209944,&lt;br /&gt;Contact : &lt;a href="mailto:malrose55@yahoo.com"&gt;malrose55@yahoo.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் தமிழ் தட்டெச்சு திறன் மிக மெதுவாக இருப்பதால்...பிறிதொரு நேரம் மீண்டும் இதைப் பற்றி மீண்டும் எழுதுகிறேன். இது பற்றி மேலும் விபரம் அறிய என்னை அணுகலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31886045-115469937536090059?l=spvaishali.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spvaishali.blogspot.com/feeds/115469937536090059/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31886045&amp;postID=115469937536090059' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31886045/posts/default/115469937536090059'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31886045/posts/default/115469937536090059'/><link rel='alternate' type='text/html' href='http://spvaishali.blogspot.com/2006/08/blog-post_04.html' title='தமிழில் பேச்சாளர் மன்றம்'/><author><name>Siththan</name><uri>http://www.blogger.com/profile/12304366660242719089</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31886045.post-115451752570011350</id><published>2006-08-02T19:10:00.000+08:00</published><updated>2006-08-02T19:18:45.706+08:00</updated><title type='text'>முதல் வணக்கம்</title><content type='html'>எதேச்சையாக இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பதிவு பார்க்க நேர்ந்து இப்போது நானே பதிவு செய்ய ஆரம்பித்து விட்டேன்.  அதன் எதிரொலி தான் இந்த முதல் வணக்கம் !!!&lt;br /&gt;&lt;br /&gt;எண்ண அலைகள் எழுத்து வரிகளாக அன்னை அருள் வேண்டி அன்போடு துவங்குகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க தமிழ் !!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31886045-115451752570011350?l=spvaishali.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spvaishali.blogspot.com/feeds/115451752570011350/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31886045&amp;postID=115451752570011350' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31886045/posts/default/115451752570011350'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31886045/posts/default/115451752570011350'/><link rel='alternate' type='text/html' href='http://spvaishali.blogspot.com/2006/08/blog-post_02.html' title='முதல் வணக்கம்'/><author><name>Siththan</name><uri>http://www.blogger.com/profile/12304366660242719089</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31886045.post-115450000306872583</id><published>2006-08-02T14:16:00.000+08:00</published><updated>2006-08-02T14:26:43.070+08:00</updated><title type='text'>தேடல்கள்.......</title><content type='html'>பல நேரங்களில்....வாழ்க்கையை சற்றே சல்லடை போட்டு சலித்து பார்க்கும் போது....என் செயல்களில்...என் எண்ணங்களில்...எல்லாவற்றிலும்...என் இருப்பிற்கான காரணத்தை...தேடி...குழப்பமாகி...தெளிந்து...மீண்டும்...குழம்பி.....&lt;br /&gt;தேடல்கள் தொடர்கதையாய்.....விடை மட்டும்...ஒரு விடுகதையாய்.....&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதாவது ஏற்படும்....அந்த தாக்கங்களை....இங்கே பதிவுகளாக....பதிவுகளாக்க.....இதோ துவங்கி விட்டேன்....&lt;br /&gt;&lt;br /&gt;தீனி தேடி குப்பை கிளரும்....கோழி போல தான்.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31886045-115450000306872583?l=spvaishali.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spvaishali.blogspot.com/feeds/115450000306872583/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31886045&amp;postID=115450000306872583' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31886045/posts/default/115450000306872583'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31886045/posts/default/115450000306872583'/><link rel='alternate' type='text/html' href='http://spvaishali.blogspot.com/2006/08/blog-post.html' title='தேடல்கள்.......'/><author><name>Siththan</name><uri>http://www.blogger.com/profile/12304366660242719089</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-31886045.post-115425885939182272</id><published>2006-07-30T19:11:00.000+08:00</published><updated>2006-08-02T18:59:41.760+08:00</updated><title type='text'>சத்குருவே சரணம்!!!!</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;என் முதல் தமிழ் பக்கம்-- அதை குரு வணக்கத்தோடு &lt;/div&gt;&lt;div align="center"&gt;துவங்குவதில் எனக்கு மகிழ்ச்சி !!!!&lt;/div&gt;&lt;div align="center"&gt;* * *&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;குருர் பிரம்மா குருர் விஸ்ணு &lt;/div&gt;&lt;div align="center"&gt;குரு தேவோ மஹேஸ்வரஹ&lt;/div&gt;&lt;div align="center"&gt;குரு சாஷாத் பர பிரம்ம&lt;/div&gt;&lt;div align="center"&gt;தஸ்மைஸ்ரீ குரவே நம&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/31886045-115425885939182272?l=spvaishali.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://spvaishali.blogspot.com/feeds/115425885939182272/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=31886045&amp;postID=115425885939182272' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31886045/posts/default/115425885939182272'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/31886045/posts/default/115425885939182272'/><link rel='alternate' type='text/html' href='http://spvaishali.blogspot.com/2006/07/blog-post.html' title='சத்குருவே சரணம்!!!!'/><author><name>Siththan</name><uri>http://www.blogger.com/profile/12304366660242719089</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry></feed>
